புதுச்சேரி, ஏப். 15- சர்வதேச திருநங்கை கள் தினம் அக்னி சிறகுகள் திருநங்கைகளின் கூட்ட மைப்பு சார்பில் புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கொண்டாடப் பட்டது. அப்போது கேக் வெட்டி திருநங்கைகள் ஒரு வருக்கு ஒருவர் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்ட னர். பின்னர் திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஷீத்தல் நாயக் கூறுகை யில், தமிழ்நாட்டில் திரு நங்கைகளுக்கு தனி நல வாரியம் உள்ளது. வட மாநிலங்களிலும் இதே போல வாரியம் அமைக்கப் பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் எங்களுக் கான அங்கீகாரத்திற்காக வும், குறைகளை தீர்ப்ப தற்காகவும் தனி நலவாரி யத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் திருநங்கை களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளுக்கு வீடு, மாத உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.