ராணிப்பேட்டை, ஆக. 21-
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஆக. 21) மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் சார்பாக திருநங்கை அமுலு தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தங்களுக்கு சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் சிரமத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளதுடன் இவர்களுக்கு சொந்த வீடு, நிலம் இல்லை என்று தெரிவித்திருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.