districts

திருநங்கைகளிடம் பணம் பறிப்பு: காவலர்கள் தற்காலிக பணி நீக்கம்

சென்னை, ஏப். 7 - திருநங்கைகளிடம் பணம் பறித்த 3 காவலர் களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை, அசோக் நகர்  100அடி சாலையில் ரகளை யில் ஈடுபடுவதாக மார்ச் 31 அன்று திருநங்கைகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அசோக்நகர் ஆய்வாளர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருநங் கைகள், அவர்களுடன் இருந்த வாலிபரிடம் கே.கே. நகர் காவல் நிலைய காவ லர்கள் முருகன், மாரிமுத்து, நாராயணன், மணிகண்டன், பாண்டியன் மற்றும் குமரன் நகர் தலைமை காவலர் சசி குமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியது தெரிந்தது.  இதையடுத்து அவர்கள் 6 பேரும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, துறை ரீதியாக விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் காவலர் கள் சசிகுமார், முருகன், பாண்டியன் ஆகிய 3  பேரையும் தற்காலிக பணி  நீக்கம் செய்து மாநகர காவல்   ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.