கடலூர்,ஜன.19- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மாற்றுத்திறனாளி யான பிரபாகரன் என்பவர் விசாரணை என்ற பெயரில் காவல்துறை யால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், பிரபாகரன் கொலை வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜானகி ராஜா, மாவட்ட நிர்வாகிகள் இராசையன், ஜீவா, வசந்தி, ஹரி நாராயணன், கனகராஜ், ரவி, ஆறுமுகம், சவுந்தர்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி. பழனிவேல், மாவட்டச் செயலாளர் பி. கருப்பையன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர். அமர்நாத் உள்ளிட்டோர் பேசினர்.