சிதம்பரம், ஜூன் 3-
காட்டுமன்னார்கோவில் தபால் நிலையத்திற்கு எதிரே உள்ள மின்மாற்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் ஒத்த தெருவில் இயங்கிவரும் தபால் நிலையத்திற்கு எதிரே மின்சார வாரியம் சார்பில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பாராமரிப்பு இல்லாததால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்மாற்றி அருகே கோவில், தபால் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளதால் உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மின்வாரி யத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்மாற்றியின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.