districts

img

அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல்

குன்றத்தூர்,ஆக.18-

     காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.  

     இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையின் ஓரம் நிறுத்தி வைத்து இருப்பதால் தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்போது இந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு இடம் நெருக்கடி ஏற்பட்டு ஒரு வழியில் மட்டுமே மாணவர்கள் செல்வ தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.