சிதம்பரம், ஜன.20- சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் சாலை அம்மாபேட்டையில் புதிய தாக உயர்மட்ட பாலம் அமைக்க உள்ள தால் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டம் மூலம் விழுப்புரம்,புதுச்சேரி, நாகப்பட்டி னம் சாலையில் சிதம்பரம் அம்மாபேட்டை கான்சாகிப் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டுமான பணி துவங்க உள்ளது. அதை யொட்டி சிதம்பரம் - சீர்காழி சாலை மூடப்படுகிறது. அதனால் சிதம்பரத்திலிருந்து இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். சீர்காழி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை கும்பகோணம், திருவாரூர் செல்லும் கனரக வாகனங்கள் சிதம்பரம்-திருச்சி சாலையில் சென்று சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இலகுரக வாகனங்கள் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு ராஜா நகர், சகுந்தலா நகர் வழியாகப் புறவழிச்சாலை மூலம் செல்ல வேண்டும். உசூப்பூர் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் ரயில்வே கிராசிங், மாரியப்பா நகர், அண்ணாமலை பல்கலைக்கழகம், மேம்பாலம் வழியாகப் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லலாம். இந்தப் போக்குவரத்து மாற்றத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.