செங்கல்பட்டு, டிச. 7- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூ ரில் இருந்து இரும்புலிச்சேரி செல்லும் பாலாற்று மேம்பாலம் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தில் ஒரு கிலோ மீட்டர் பாலம் பாலாற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இரும்புலி சேரி, சின்ன எடையாத்தூர், அட்ட வட்டம், சாமியார் மடம், சேவூர் ஆகிய ஐந்து கிராம மக்களுக்கு போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மருத்துவ மனை மற்றும் அவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்களும் செல்ல முடியாமல் மூன்று கிலோ மீட்ட ரில் செல்ல வேண்டிய பாதை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகி யது, அதனால் மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு பாலாற்றின் குறுக்கே சாலை அமைத்து வீராணம் குழாய்களைக் கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்கு வரத்து சரி செய்யப்பட்டது தொட ர்ந்து ஆண்டு தோறும் பெய்து வரும் மழையால் கடந்த 8 ஆண்டுகளாக மழைக்காலங்களில் தற்காலிக பாலம் சிதிலமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது, மிக்ஜம் புயலால் பெய்த கன மழையால் தற்காலிக பாலம் சிதிலமடைந்து உடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே உடைந்த மேம்பாலத்தை அகற்றி அரசு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.