சென்னை, செப். 18- சென்னை மாநகராட்சி 86 ஆவது வார்டில் ஐசிஎப் காலனி, கே.கே.நகர், அத்திப்பட்டு கலைவாணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பேஸ் 2, 3 ஆகிய பகுதிகள் உள்ளன. அம்பத்தூர் அம்பேத்கர் சிலையில் இருந்து வானகரம் செல் லும் சாலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வந்தது. பொது மக்களின் நீண்ட போராட்டத்தை தொடர்ந்து, இங்கு குப்பை களை கொண்டு வந்து கொட்டி விட்டு, பின்னர் அங்கிருந்து கொடுங்கையூர் தே கிரவே மேலாண்மை திட்டத்திற்கு தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கெனவே மலை போல் குவிந்துள்ள குப்பை கிடங்கை அகற்றுவோம் என அதிகாரிகள் பலமுறை கூறினாலும் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் மழைக்காலங்க ளில் அதில் இருந்து வெளி யேறும் நச்சு கலந்த குப்பைக் கழிவு நீர் சாலை யில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். நடந்து கூட செல்ல முடியாத நிலை. இதில் இருந்து கடு மையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகிறது. அந்த தண்ணீர் காலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது டெங்கு உள்ளிட்ட பல்வேறு விஷக் காய்ச்சல் அதி கரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையில் தேங்கியுள்ள நச்சு கழிவு நீரை அப்புறப்படுத்தும், முறையாக மழைநீர் வடிகால்வாய் அமைத்து, அதன் மூலம் குப்பை கழிவு நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.