districts

2 ஆயிரம் மையங்களில் நாளை மெகா கோவிட் தடுப்பூசி முகாம்

சென்னை, ஜூலை 22 - சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஞாயிறன்று (ஜூலை 24) 2 ஆயிரம் மையங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ள தாக மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். 32வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் ( ஒரு நிலையான முகாம், 9 நடமாடும் முகாம்கள்) என  200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 1000 சுகா தாரக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர் கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவச மாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, செப்டம்பர் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 47 லட்சத்து 77 ஆயிரத்து  906 நபர்கள் முன்னெச் சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர்.  இவர்களில் 3 லட்சத்து 43  ஆயிரத்து 738 நபர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை தவணை செலுத்திக் கொள்ளாத 44 லட்சத்து 34 ஆயிரத்து 168 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. எனவே, முதல் தவணை, இரண்டாம் தவணை, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நடைபெறும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மேயர்  விடுத்துள்ள செய்தி  குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.