திருவிக நகர் 75ஆவது வட்டத்தில் உள்ள மூலிகை பூங்காவில் உள்ள கழிவறைகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் கவுன்சிலர் பா.தேவி, நிர்வாகிகள் தாமரை, சரளா, கனகவல்லி, வேல்விழி, தனலட்சுமி, விஜயா, அமாவாசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.