districts

img

மின்துறையை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைப்பு விழுப்புரம் மாநாடு

விழுப்புரம், மார்ச்.12- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் கோட்ட  மாநாட்டிற்கு கோட்டத் தலைவர்ஆர்.அருள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இ.குண சேகர் செங்கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.ஏழுமலை வரவேற்றார்.  மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.பழனிவேல் துவக்கி வைத்து பேசினார்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் எம்.புருஷோத்தமன், திட்டச் செயலாளர் ஆர்.சேகர், இணைச் செயலாளர் பி.சிவசங்கரன், எஸ்.அய்யப்பன், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.மூர்த்தி ஆகியோர் பேசினர். மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும்,. 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை சிஎல்ஆர் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ,பி.இ  படித்தவர்களைக்கொண்டு நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு தலைவராக வி.வெங்கட கிருஷ்ணன், தலைவராக இ. முத்துக்குமரன், செயலாளராக ஆர்.அருள் ஆகியோர்  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.