districts

img

பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ஒன்றிய அரசின் இரண்டு விருதுகள்

திருவள்ளூர், ஆக 23-

     பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் இரண்டு விருது கள் கிடைத்ததை முன்னிட்டு மருத்துவ மனையில் பாராட்டு விழா புதனன்று (ஆக-23),  நடைபெற்றது.

     திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மருத்துவ வசதி கள் சிறப்பாக இருந்தமைக்காக ஒன்றிய அரசின் தேசிய அளவிலான விருது மற்றும் மகப்பேறு சேவைக்கான லக்ஷயா எனப்படும் விருதுகளும் வழங்கப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் மருத்துவ மனையில் கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் உரிய நேரத்தோடு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு பயனடைந்தனர்.மேலும் மேல் பரிந்து ரைக்காக சென்னைக்கு செல்பவர்களுடைய எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு பெரும்பாலான நோயாளிகள் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளை சிறப்பாக செய்தவர்களுக்கு மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் பி.கே.அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக மருத்துவப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும், மருத்துவ உபகரணங்களை கையாளுப வர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனை ஏற்பாட்டில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

     இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ மனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.