வேளச்சேரி, அக்.12- பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை 1,730 ஏக்கரில் பரவி உள்ளது. இங்கு அரிய வகை உள்ளூர் பறவைக ளும், பல்வேறு நீர்வாழ் உயிரினங்களும், தாவர இனங்களும் காணப்படு கின்றன. வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இங்கு ஆண்டுதோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வகையான வெளிநாட்டு பறவை கள் வந்து செல்கின்றன. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுக ளில் பறவைகள் வரத் தொடங்கும். தற்போது மத்திய ஆசியாவின் பல் வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட வகை யான பறவைகள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் தாண்டி பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்துக்கு வந்துள்ளன. இந்த சதுப்பு நில பகுதிகளுக்கு ஐரோப்பா, ரஷியா நாடு களில் உள்ள மஞ்சள் வாலாட்டி, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன், பூனைப்பருந்து, ஜப்பான், சீனா நாடுகளில் காணப் படும் தலை ஆள்காட்டி, சாதா உள்ளான், பேதை உள்ளான் உள்ளிட்ட வண்ண வண்ண பறவைக ளின் வருகை அப்பகுதி மக்க ளின் மனதை கவர்ந்து வருகி றது. இவற்றின் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.