districts

img

மின் வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

மின் வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு, மாவட்டப் பொருளாளர் என்.கோவிந்தராசு, கோட்டத் தலைவர் ஏ.கண்ணன், கோட்டச் செயலாளர் டி.ராஜகோபால், துணைத் தலைவர் என்.ஜெயராமன், இணைச் செயலாளர் கே.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.