மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜன.25) தாம்பரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாம்பரம் பகுதி தலைவர் பிரேமாவதி தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, விசிக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், சிபிஎம் தாம்பரம் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணா, மாதர் சங்க தென்சென்னை மாவட்ட செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், பகுதிச் செயலாளர் ஆர்.விஜயா, பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பேசினர்.