சென்னை, ஜன. 7- கொரோனாவால் உயிரி ழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம், அரசாணை 354இன் படி ஊதியம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறை வேற்ற அரசை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி தர்ணா போராட்டமும், பிப்ர வரி மாதம் 10ஆம் தேதி உண்ணாநிலை போராட்ட மும் நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் போரா ட்டக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைவர் பெருமாள் பிள்ளை செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கொரோனா பேரிடரில் கடந்த இரண்டு ஆண்டு களாக அரசு மருத்து வர்கள் ஓய்வின்றி பணி யாற்றி வருகிறோம். கொ ரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், இங்கு தன்னலமின்றி தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணி யாற்றி வருகிறோம். இருப்பி னும் இங்கு எப்போதுமே அரசுக்கு உறுதுணையாக உள்ள அரசு மருத்துவர்கள் மீது முதல்வரின் பார்வை விழவில்லை. புதிய ஆட்சி அமைந்து 8 மாதங்களுக்கு பிறகும் கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை. தமிழகத்தில் சுகாதாரத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேநேரத்தில் உலகி லேயே தமிழகத்தில் தான் மருத்துவர்கள் தங்களின் சம்பளத்திற்காக, பல வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். பல மாநிலங்களில் இன்ன மும் கிராமங்களில் மருத்து வர் இருப்பை உறுதி செய்வதே மிகப்பெரிய சவா லாக உள்ளது. இந்நிலை யில் கிராமப்புற சுகாதார சேவையில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தருவதற்கு அரசு மறுத்து வருகிறது. 2009ஆம் ஆண்டு, கருணா நிதி ஆட்சியில் போடப் பட்ட அரசாணை354 இல், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தருவதற்கு வழிவகை செய்யப்பட்டும், இதுவரை வழங்கப்படவில்லை. ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணி யாற்றி வரும் இளைய மருத்துவர்களுக்கு பேருதவி யாக இருக்கும். மருத்து வர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதிமுக ஆட்சி யில் கிடப்பில் போடப்பட்ட கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354க்கு உயிர் கொடுப்பதோடு, உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்திட வழிவகுக்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வலியுறுத்தி சென்னையில் வரும் 19ஆம் தேதி தர்ணா போராட்டமும், பிப்ரவரி 10ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணா நிலை யும் மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.