சென்னை, ஜன. 4- ஊடகங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒரு வரின் மர்ம மரணம் குறித்து, ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது பாஜக தலை வர் அண்ணாமலை நிதானம் இழந்து ஒருமையில் பேசுவது செய்தி சேகரிக்கும் பணி குறித்து அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த மோசமான அணுகுமுறை, மிரட்டல் போக்குக்கு எம்யூஜே,உள்ளிட்ட பல அமைப்பு கள் கண்டனம் தெரிவிப்பதோடு, தமக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்து திசைதிருப்புவதை அண்ணாமலை கைவிட்டு ஊடகங்களின் உரிமைகளை மதித்து நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என வலியுறுத்தி யுள்ளன.