புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 130வது பிறந்தநாளையொட்டி சென்னையில் ‘கூட்டாஞ்சோறு அரங்கு’கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு தலைமையில் நடைபெற்றது. பாரதிதாசன் குறித்து திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழியும், ‘தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை’ என்னும் தலைப்பில் தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் களப்பிரனும் உரையாற்றினர். தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன், துணைச்செயலாளர் ஐ.சரத்குமார் உள்ளிட்டோரும் பேசினர்.