சென்னை, ஜூலை 19-
திருவொற்றியூர் - மணலி இடையே சிபிசிஎல் அருகே பக்கிங்காம் கால்வாய் மேல் பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங் களால் இந்த பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
இதனால் திருவொற்றி யூரில் இருந்து மணலிக்கு செல்ல வேண்டிய வாகனங் கள் சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதால் நேரமும் பணமும் விரயமாகிறது.
மேலும் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய பாதையில் மோட்டார் பைக், கார் போன்ற வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேம் பால பணிகளை விரைந்து முடிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் சார்பில் பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் பணிகளை விரைந்து முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மேம்பாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் மணலி மார்க்கெட் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பேரவையின் தலைவர் த.வெள்ளையன், செயலாளர் சவுந்தரராஜன், நிர்வாகிகள் ராமசாமி, தங்க குமார், தேவராஜ், சுகுமார், வியாசை மணி, நாராயண் லால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.