உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதனன்று (நவ.1) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் முன்னிலையில் திட்ட விளக்கவுரையாற்றி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.