districts

img

அவமதிப்புக்கு எதிராக போராடி வென்ற திருப்பத்தூர் மாற்றுத்திறனாளி

திருப்பத்தூர் பிப். 15 – திருப்பத்தூர் மாவட்டம்,  விசமங்களம் பகுதியை சேர்ந்தவர் குப்தா என்பவரின் மகளான வெண்ணிலா. இவருக்கு பரத் (14) என்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஞாயிறன்று (பிப் 11) திருப்பத்தூரில் மருத்துவமனைக்கு  அழைத்து சென்று மீண்டும் விசமங்களத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார்  பேருந்தில் தனது மாற்று திறனாளி மகன் பரத்தை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது தனியார் பேருந்தின் நடத்துநர் காந்தி என்பவர் இரு வரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் செய்வதறியாது நின்ற பரத்தின் தாயார் வெண்ணிலா வேறு பேருந்தில் வந்து விசமங்களம் பகுதிக்கு வந்து ஊர்பொதுமக்களிடம் தகவல் தெரி வித்து சாலை மறியலில் ஈடுபட்டார். தகவ லறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி நடத்துநர் மீது வழக்கு பதிவதாக கூறியதால் அனை வரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து திங்களன்று (பிப் 12) அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்று கொண்ட அவர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகி யோருக்கு புகார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதனையடுத்து வியாழனன்று திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது பேருந்து நடத்துனர் மாற்றுத்திறனாளி சிறுவன் பரத் மற்றும் அவரது தாயாரிடம் தனது செய்கைக்கு மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட செய லாளர் கே.ஜெ.சீனிவாசன், சிபிஎம் திருப்பத்தூர் தாலுக்கா செயலாளர் எம்.காசி மற்றும் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.