districts

img

மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் பயணச்சீட்டு அலுவலகம்

சென்னை, டிச. 31 - மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் நிரந்தரமாக பயணச்சீட்டு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. ஆலந்தூர் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி வெள்ளியன்று (டிச.  30) நங்கநல்லூரில் பிரச்சா ரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், மழைக் காலங்களில் தில்லை கங்கா நகர் சுரங்கப் பாலம் மூழ்கி விடுவதால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மீனம் பாக்கம் ரயில் நிலையத்தில் ஜிஎஸ்டி சாலை அமைந் துள்ள பக்கத்தில் மட்டும்  பயணச்சீட்டு அலுவலகம் உள்ளது. இதனால் நங்க நல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இரண்டு முறை படிக்கட்டு களை ஏறி இறங்க வேண்டி யுள்ளது. இந்த சிரமத்தை போக்க நடைமேடையில் ஒரு நிரந்தர பயணச்சீட்டு அலுவலகத்தை அமைக்க வேண்டும். மூவரசம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி படுக்கைகளின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும், மணப் பாக்கத்தில் மேடு பள்ளமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்கும் தனி வட்டாட்சியர், நில அளவையாளர் உள்ளிட்டோர் மீது துறை வாரி  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி னர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பிரச்சா ரத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.  ஆலந்தூர் பகுதிச் செய லாளர் என்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நங்க நல்லூர் கிளைச் செயலாளர் கே.பாரதி வரவேற்றார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். கோகுல் நன்றி கூறினார்.