சென்னை, ஏப். 12- தேசிய வீதி நாடக தினம், அம்பேத்கர் பிறந்தநாள், திருநங்கைகள் தினம் என முப்பெரும் விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கொள த்தூர் கிளை, சென்னை கலைக்குழு சார்பில் கொள த்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்டப் பொருளாளர் பா.ஹேமாவதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நாடகவியலா ளர் பிரளயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சென்னை மாநகராட்சி 4ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கருத் துரை வழங்கினர். சென்னை கலைக்குழுவின் ‘பயணம்’ வீதி நாடகம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில். மாநகராட்சி கொறடா எ.நாகராஜ், திருவிக நகர் மண்டலத் தலை வர் சரிதா மகேஷ்குமார், வழக்கறிஞர் கே.சந்துரு, பெரியார் நகர் சுற்றுலா வாகன உரிமையாளர் சங்கத் தின் தலைவர் கிருபாகரன், பகிர்வு அமைப்பாளர் தமிழ் மணவாளன், திருநங்கைகள் உரிமை சங்கத்தின் இயக்கு நர் ஆர்.ஜீவா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.