கடலூர்,ஜன.9- கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயி கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்து வந்தனர். வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் பெய்யாத நிலையில் விவசாயிகளுக்கு ஏற்றவாறு இந்த மழை அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பயிர் சாகுபடி செய்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் கடலூர் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், கடலூர் விருத்தாச்சலம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள் ளது. நீரால் சூழப்பட்ட விவசாய நிலங்கள் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் பெருமளவு கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக டெல்டா பகுதியான காட்டுமன்னார்
கோவில், சிதம்பரம் பகுதி யில் சுமார் 30 ஆயிரத்துக் கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள் ளது. அதேபோல் குறிஞ்சிப் பாடி அடுத்த கல்குளம் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்ததால் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல், ஆழிச்சிக்குடி, கருவேப் பிலங்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் சாகு படி செய்துள்ள நிலையில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரால் சூழப்பட்டு வயலிலேயே சாய்ந்துள் ளது. கடலூர் வட்டத்திற் குட்பட்ட தூக்கணம்பாக்கம் ரெட்டிச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து உள்ளன. அதேபோல் மாவட்டத் தில் பல பகுதிகளில் மிகப் பெரிய கனமழை காரண மாக சுமார் 50,000 மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றி லும் மழை நீரில் சூழ்ந்து சாய்ந்ததால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தேவையான அளவு கடலூர் மாவட்டத்தில் பெய்ததால் அதை நம்பி ஏக்கர் ஒன்றுக்கு 30,000 செலவு செய்து விவசாயி கள் சாகுபடி செய்தனர். தற்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் வயல்வெளி யில் சாய்ந்ததால் விவசாயி கள் கண்ணீர் மல்க செய்வ தறியாது திகைத்து நிற்கின்றன. மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை உரிய முறையில் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.