districts

சென்னை முக்கிய செய்திகள்

புயல் நிவாரணம் கிடைக்காதோர்   விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு, டிச.17- செங்கல்பட்டு மாவட்டத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கும் நிவாரணத்தொகையினை வழங்க நியாய விலைக் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.  பயனாளிகள் பட்டியலில் இடம்பெறாத நபர்கள் புயலினால் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை யினை அணுகி தங்களது வங்கி கணக்கு விவரங்களுடன் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அலுவலர்களால் களஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.  இது குறித்து சந்தேகம் இருப்பின் செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்- 044 27427412 , 044 27427414 , வாட்ஸ்ஆப் எண். 9444272345, தாம்பரம் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்  1800 4254355, 1800 4251600, வாட்ஸ்ஆப் எண் 8438353355, இணைப்பதிவாளர், கூட்டுறவு  044 27426604 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு  இக்னைட் விருதுக்கான போட்டி

சென்னை, டிச. 17- தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் சிறுவர் சிறுமியரை ஊக்குவிக்கும் வகையில் விவோ நிறுவனம், விவோ இக்னைட்: தொழில்நுட்பம் மற்றும் புதுமை விருதுகள் போட்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்திற்கான சிறந்த தீர்வு வழங்குபவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்க்கும் விதமாக இந்த போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.   இந்த போட்டியில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்  நல்லதிற்கான தொழில்நுட்பம்  என்ற கருப்பொருளில்  முன்மாதிரி வகையின் கீழ் தனியாகவும் குழுவாகவும் பங்கேற்கலாம். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்கலாம். முதல் பரிசு பெறுவருக்கு ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசும், 2வது இடம்பிடிக்கும் 4 பேருக்கு ரூ. 14 லட்சம் ரொக்கத் தொகையும் பிரித்து வழங்கப்படும். பங்கேற்ற பார்க்கவும்: www.vivoignite.com

மூதாட்டியிடம் 20 சவரன்  நகை கொள்ளை

மதுராந்தகம், டிச.17- மதுராந்தகம் அருகே தனியாக இருந்த வீட்டில் மூதாட்டியை தாக்கிய மர்ம நபர்கள் இருவர் 20 சவரன் நகையை  கொள்ளை அடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் வெள்ள புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம் கிராமத்தில் பார்ம் ஹவுஸ் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சரோஜினி 63 வயது மூதாட்டி இவர் மகன் சென்னையில் வசித்து வருகிறார். மூதாட்டி சரோஜினி அம்மா மட்டும் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக  இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சனியன்று இரவு சுமார் 11 மணியளவில் இரு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த சரோஜினி அம்மாவை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அவர் கழுத்து மற்றும் கையில் அவர் அணிந்து இருந்த தங்க நகை 20 சவரன் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.  உடனே சரோஜினி அம்மாள் சென்னை யில் உள்ள தனது மகனுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அங்கிருந்து மதுராந்தகம் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டு மது ராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள்  சரோஜினி அம்மாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் முதல்முறையாக உயர்செயல்திறன்கொண்ட போன்

சென்னை, டிச. 17- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம், ஸ்நாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 மொபைல் இயங்குதளம், சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் க்யூ1 ஆகிய தொழில்நுட்பத்தில் ஐக்யூஓஓ 12 என்னும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,999 முதல் துவங்குகிறது; இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ஐக்யூஓஓ இ-ஸ்டோர் மற்றும் அமேசான்.இன் இணையதளங்களில் கிடைக்கிறது. எச்டிஎப்சி, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி அல்லது ரூ.5 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம் அறிமுக சலுகையாக, அனைத்துப் பயனர்களுக்கும் 6 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் வட்டியில்லா இஎம்ஐ வசதி. மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் ஐக்யூஓஓ 12  ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்

அம்பத்தூர், டிச. 17- மதுரையிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து அங்கிருந்து பூந்த மல்லிக்கு கொண்டு செல்வ தாக மதுவிலக்கு அம லாக்கப் பிரிவு காவல் துறை யினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இட மான வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக  பேசினார். மேலும் அவர்  கொண்டு வந்த பையை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசா ரணை நடத்தியதில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அகிலன் (21) என்பதும், அவர் கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மினிலாரி உரிமையாளர்கள்  சங்க பேரவைக்கூட்டம்

புதுச்சேரி,டிச.17- புதுச்சேரி மாநில மினி லாரி மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கடலூர் சாலையில்  உள்ள தியாகிகள் திடலில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அந்தோணிதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர்  பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மதிவாணன், அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனத்தின்  தமிழ் மாநில குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். புதுச்சேரி மாநில சிஐடியு உடன் இணைக்கப்பட்ட தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி ,மருதப்பன் உட்பட  பலர் பங்கேற்றனர்.

பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு 

 கிருஷ்ணகிரி,டிச.17- ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் இளங்கலை முதுகலை இருபால் மாணவர்களுக்குமான பருவத்தேர்வு நவம்பரில் நடைபெற்றது.  தேர்வு முடிவுகளை கல்லூரியின் நிறுவனர் வே.சந்திரசேகரன் டிச 12 ல் வலைதள முகவரியில் வெளியிட்டார். முதல்வர் முனைவர் என்.குணசேகரன்,தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்ட தேர்வாணையர் முனைவர் எஸ்.சுரேஷ் உடன் இருந்தனர். தேர்வு முடிவுகள் மாணவர்களுடைய பெற்றோர்களின் கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.