மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில், தொன்போஸ்கோ கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப. செல்வன், நிர்வாகிகள் ரவிதாசன், சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.