districts

img

திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,ஜுலை 29-

   திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ரவுண்டானா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இயங்கி வந்த பார்சல் அலுவலகம் கடந்த 17 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. மீண்டும் பார்சல் அலுவலகத்தை திறக்க வேண்டும், அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை முதல் தாம்பரம் வரை தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும், திருவண்ணாமலை ரயில் நிலைய பயணிகள் பயன்படுத்துவதற்காக என்எல்சி நிறுவனம் நன்கொடையாக அமைத்துக் கொடுத்த கழிவறைகள் மூடப்பட்டுள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்,

    ரயில் நிலையத்தில் ரயில் வருகையை அறிவிக்கும் ஒலிபெருக்கி அமைப்பை செயல்படுத்த வேண்டும், திரு வண்ணாமலையிலிருந்து மயிலாடுதுறை, தாம்பரம், சென்னை சென்ட்ரல், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல ரயில்களை இயக்க வேண்டும், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, தங்கும் அறையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எம். பிரகலநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ஏ.லட்சுமணன், ப.செல்வம், எஸ்.ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பி னர்கள் எம்.தமிழ்ச்செல்வி, எஸ். செல்வி, சி. எம். பிரகாஷ் அண்ணாமலை, ச.குமரன் மற்றும் நகர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.