districts

img

திருவண்ணாமலை, வேலூர் ஆட்சியர்கள் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை, ஜன.29 -  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பா. முருகேஷ், தமிழ்நாடு வேளாண்மை துறை இயக்குநராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த,  பாஸ்கர் பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு, அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகள், நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பாடுபடும் என்றார்.  (திங்களன்று ஜன.29) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வேலூர் மாவட்ட புதிய ஆட்சியராக வே.இரா.சுப்புலட்சுமி திங்களன்று (ஜன. 29) பொறுப்பேற்றுக் கொண்டார்.