செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பி.வி.களத்தூர் வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் வனப்பகுதி சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தனித்துணை ஆட்சியர் சாஜிதா பர்வின், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஆர்.டி.அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.