சென்னை, மார்ச் 12 - ‘சமத்துவத்தை யோசி; மாற்றத்தை கட்டியெழுப்பு’ என ஐ.நா.சபை அறை கூவலை நிறைவேற்ற பெண்களை திரட்டுவோம் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கூறினார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச் 12) சென்னையில் மகளிர் தின விழா நடை பெற்றது. இந்த நிகழ்வில் வாலண்டினா மேலும் கூறியதாவது: பாலியல் வன்முறையை தடுக்க, மாநிலம் முழுவ தும் பாலியல் குற்றங்களை பட்டியலிடும் குழுக்களை கேரள அரசு அமைத்துள்ளது. பாலின சமத்துவத்தை பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடித்து மாண வர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தி வரு கிறது. மதவாத அமைப்பு களின் அச்சுறுத்தலை மீறி இவற்றையெல்லாம் கேரள இடதுமுன்னணி அரசு செய்கிறது. இந்தியாவில் ஒரு நிமிடத்தில் பெண்களுக்கு எதிராக 95 துன்புறுத்தல்கள், 22 பாலியல் வன்புணர்வுகள் நடைபெறுகின்றன. சட்ட மன்றம், நாடாளுமன்றங் களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றா மல் உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பை உறுதி செய்வோம், மதச்சார்பின் மையை மீட்டெடுப்போம், பாலின சமத்துவத்தை நிலை நாட்டுவோம் என உறுதி யேற்போம். பெண்களை அமைப்பாய் திரட்டுவோம். இவ்வாறு அவர் பேசி னார். இந்த நிகழ்வில் சங்கத் தின் பொதுச் செயலாளர் கே.கர்சன், நிர்வாகிகள் கே.அனுசியா, மல்லிகா, மாதர் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி மற்றும் ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.