districts

img

வார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஜான் பேச்சு

அம்பத்தூர், ஆக. 9-

      ஆவடி மாநகராட்சியில் எந்த பணிகளும் நடைபெற வில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஏ.ஜான்   குற்றம்சாட்டினார்.

     ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் உதயகுமார்  தலைமையில் செவ்வா யன்று (ஆக். 8) நடைபெற்றது.

     கூட்டத்தில் துணை மேயர் சூரியகுமார், ஆணை யாளர் க.தர்பகராஜ், பொறி யாளர் பி.வி.ரவிச்சந்திரன், மேலாளர் செல்வராணி, சுகாதார அலுவலர் மொய் தீன், உதவி பொறியா ளர்கள் மதிவாணன், சங்கர், துர்கா தேவி, வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த 10ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஜான் பேசுகையில், இரவு 11 மணிக்கு மாநகராட்சி அலுவ லகத்தில் இருந்து தொடர்பு கொண்டு புதனன்று கூட்டம் நடைபெறுகிறது என்றும் 2 சப்ஜெக்ட் பற்றி  கூறுங்கள் என்றும் கேட்கி றார்கள். திடீரென இரவு  இதுபோன்று கேட்டால்  எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பினார். தீர்மா னம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இப்படி தீர்மானம் நிறைவேற்றி, முடிக்கப்படாத பணிகள் குறித்து அடுத்த மாத கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார்.  

     வார்டில் உள்ள குறை களை அதிகாரிகளிடம் கூறினால் எந்த நடவடிக் கையும் எடுப்பதில்லை என்று கூறிய அவர் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர் மானங்கள் 3 மாதத்திற் குள் ஒப்பந்தம் விடப் பட்டு பணிகள் தொடங்க வில்லை என்றால் அது காலாவதியாகிவிடும் என  அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர். அப்படி என்றால் எதற்காக இந்த கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி, இதற்கு மேயர், ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த மேயர்,  கடந்த 3 மாதமாக தனது வார்டில் தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று வார்டு உறுப்பினர் ஜான் கூறி வருகிறார். குடிநீர் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதி காரிகளிடம் கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும் பொறியா ளர்கள், அதிகாரிகள் கள ஆய்வுக்கு செல்வதில்லை.  இனிமேல் தினசரி பொறி யாளர்கள், அதிகாரிகள் கள  ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி னார்.  வருங்காலங்களில் பணிகள் விரைந்து நடை பெற நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.