districts

சனாதனத்திற்கு இடமில்லை: தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

  சென்னை,ஜன.14- தைத் திருநாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரி வித்துள்ளனர். முத்தரசன் தனது வாழ்த்து செய்தியில், “மனித சமூகத்தை பிளவுபடுத்திய நால்வர்ண முறையும், இதனை ஆதாரப்படுத்தி கட்டமைக்கப்பட்ட சாதிய அடுக்குமுறையும் நியாயப் படுத்தப்படுகின்றது. சவால்களை சந் தித்து வென்று வாழும் தமிழர் வாழ்வில் சனாதனத்துக்கு இடமில்லை என்று வெற்றி முழக்கமிடும் பொங்கலாக, தமிழ்நாடு முழுவதும் கட்சி அலு வலகங்களிலும், இல்லங்களிலும் பொங்கலிட்டு தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என குலவை யிடுவோம். குறுகிய மதவெறி, சாதிவெறியை முறியடிக்க தைத் திருநாளில் உறுதி ஏற்போம். முன்னேற்றத்தின் தடைச் சுவ ராகும் பழைமை குப்பைகளை எரித்து,  புதுயுகம் படைக்க பொங்கல் திரு நாளில் உறுதி ஏற்போம்” என்று கூறி யுள்ளார். திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர்  கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவ ளவன், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித் திருக்கிறார்கள்.