districts

img

திருப்பத்தூர் நகராட்சியில் எரியூட்டப்படும் சுடுகாட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் பிரேதங்களை எரியூட்டுவதில் சிக்கல்

திருப்பத்தூர் நகராட்சியில் எரியூட்டப்படும் சுடுகாட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் பிரேதங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் அளவு நீரில் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து சிபிஎம் திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.காசி விடுத்துள்ள அறிக்கையில் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இதனைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு திங்களன்று (செப்.25) ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.