districts

img

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உணவு வழங்கினர்

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிந்தாதரிப்பேட்டை பகுதி மக்களுக்கு தெருத்தெருவாக சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உணவு வழங்கினர்.

திருவான்மியூர் பெரியார் நகரில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன் நிவாரண பொருட்கள் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதி செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட தரமணி பெரியார் நகர் மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், ஆர்.சிங்காரவேலன், தென்சென்னை மாவட்டச்செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பிரட் மற்றும் நாப்கின்ஸ் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

மிக்ஜம் புயல் மழையால், விருகம்பாக்கம் கால்வாய் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை  பார்வையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நிவாரணப்பணிகளை முடுக்கிவிட்டார்.  கட்சியின் அண்ணாநகர் பகுதிச் செயலாளர் கே. மகேந்திரவர்மன் தலைமையில் கட்சி ஊழியர்கள் உணவு, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.