districts

img

கொசஸ்தலை ஆற்றின் கரையை உயர்த்தும் பணி....

வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர்  மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளிவாயல், விச்சூர் நாப்பாளையம் ஆகிய இடங்களில் நீர்வளத்துறை சார்பாக  கொசஸ்தலை ஆற்றின் இரு புறங்களில் உள்ள கரைகளை  10 கி.மீ நீளத்திற்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை சனிக்கிழமை   பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்  நேரில் பார்வையிட்டார்.  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,  மாவட்ட  கண்காணிப்பு அலுவலர் வி.இராஜாராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான்வர்கீஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.