districts

img

கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி மனு

கடலூர், மே 9 - சவுதி அரேபியாவில் இறந்த தன்னுடைய கணவரின் உடலை மீட்டு தரக் கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மனு அளித்தனர். கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் வட்டம், கூடுவெளி சாவடியை சேர்ந்தவர் சுரேஷ் கலிய மூர்த்தி. இவரது மனைவி சீதா. சுரேஷ் கலியமூர்த்தி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் அபு அப்துல்லாவிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மே 8ஆம் தேதி அவ ருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்ட தாகத் தெரிகிறது. எனவே எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எனது கணவரின் உடலை விரைவாக சொந்த கிராமத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்று அந்த மனுவில் கூறியிருந்தார்.