மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரியும், கூட்டுறவுத் துறையை சீர்குலைக்கத் துடிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் சதியைக் கண்டித்தும் திங்களன்று (ஆக.21) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் அறைகூவல் விடுத்தது. இதனையொட்டி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கே.கோவிந்தராஜூ தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கோரிக்கைகள் விளக்கி சம்மேளன தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன் ஆகியோரும், போராட்டத்தை ஆதரித்து சமூக செயற்பாட்டாளர் எஸ்.வி.வேணுகோபாலனும் பேசினர்.