districts

ஏழைகளின் தலையில் பாறாங்கல்லைப் போட்டுள்ள ஒன்றிய பட்ஜெட் மோடி அரசுக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம்- போராட்டத்திற்கு அறைகூவல்

சென்னை, பிப்.2- ஏழைகளின் தலையில் பாறாங் கல்லைப் போட்டுள்ள ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மோடி அரசுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்  தின் மாநிலக்குழு கண்டனம் தெரி வித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.லாசர், மாநிலப்  பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங் கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய பாஜக அரசு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டானது சாதாரண கிரா மப்புற கூலிகளுக்கும் நகர்ப்புற ஏழைகளுக்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 100  நாள் வேலைத்திட்டப் பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட குறை வான ரூ.89 ஆயிரம் கோடியை விட  இந்த ஆண்டு மேலும் ரூ.29 ஆயிரம்  கோடியைக் குறைத்து ரூ.60 ஆயி ரம் கோடியாக அறிவித்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி  வந்த உணவு மானியத்தை ரூ.2  லட்சத்து 87 ஆயிரம் கோடியிலி ருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 362  கோடியாக குறைத்துள்ளது. நகர்ப்புற, கிராமப்புற வேலை யில்லா திண்டாட்டத்தை போக்கு வதற்கான விதத்தில் எந்த அறி விப்பும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை. அனைவருக்கும் குடி மனை வழங்கல் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் உயர்வில்லை.  முதியோர் பென்சன், வறு மைக்கோட்டுக்கு கீழே இருப்ப வர்களுக்கான இலவச அரிசி என்ற பிரச்சனைகளில் எந்தவித அறி விப்புகளோ இந்த அரசின் பட்ஜெட்  டில் இல்லை. இந்த பட்ஜெட் செய்தி யை படித்தவுடன் உடம்பிலே நெருப்பை அள்ளி வீசுவதுபோல் இருந்தது. இந்த அரசுதான் ஏழை களின் அரசா? இந்த மோடிதான் ஏழைகளைக் காப்பாற்ற அவதா ரம் எடுத்து வந்துள்ளாரா? இவர்கள்  தான் நவ இந்தியாவைப் படைக் கப்போகிறார்களா? என்ற ஆயிரம் கேள்விகள் கோடிக்கணக்கான மக்களிடமிருந்து எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகளை எதிர்த்து தேசம் முழுவதும் கண்டனக்குரல் எழும்பி யுள்ளது. எனவே மோடி அரசைக் கண்டித்து விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர்  மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.