விழுப்புரம், செப். 17- விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் மயிலம் அடுத்த பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரின் மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது. மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கால்நடை களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.