districts

சென்னை முக்கிய செய்திகள்

பேசின்பாலம் அருகே ரயில் தடம்புரண்டது

சென்னை,டிச.15- சென்னை பேசின்பாலம்  அருகே பணிமனைக்கு சென்ற ரயில் வெள்ளியன்று மாலை தடம் புரண்டது.  ரயில் பெட்டியின் நான்கு  சக்கரங்களும் தண்டவாளத் தில் இருந்து கீழே இறங்கி யது. பணிமனைக்கு சென்ற ரயில் என்பதாலும் பயணி கள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதை யடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயில் பெட்டியை சீரமைக் கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அறவை  துவங்கியது

மதுராந்தகம், டிச.15- மதுராந்தகம் வட்டம் படாளத்தில்  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டிற்கான அறவை பணியினை வெள்ளி யன்று (டிச. 15) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஆலை  இயக்கப்பட்டு சுமார் 2 லட்சத்து 3 ஆயிரம் டன் கரும்பு அறவை செய்யப்பட்டது.   இந்த ஆண்டும் டிசம்பர் மாதம்  அறவை துவக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு போல நான்கு மாதம் ஆலை  இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.   கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக கரும்பு அறவை செய்ய ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.  இருந்தாலும் சுமார் 2 லட்சம் டன் அறவை குறையா மல் அறவை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.    வரும் மார்ச் அல்லது ஏப்ரல் வரை ஆலை இயக்கப்பட உள்ளதாக அவர்கள் கூறினர். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை  செயல் ஆட்சியர் ஜவகர்பிரசாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாதவரம் வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு பேருந்து வசதி  உதயநிதியிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 15- மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அமைச்சர் உதய நிதியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம் செங்குன்றம் பகுதிச்செயலாளர் வி.கமலநாதன் மனு அளித்தார். அந்த மனுவில், மாதவரம் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால் சாதாரண  ஏழை எளிய மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது. எனவே பேருந்து  வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.பொதுமக்கள் அளிக்கும்  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாதக்கணக்கில் தாமதம் செய்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஊழியர்கள் பற்றாக்குறை எனக் கூறுகிறார்கள். மேலும் சிலர் இதை பயன்படுத்தி, வேலைகளை நாங்கள் விரைந்து முடித்துக் கொடுக்கிறோம் எனக் கூறி பொதுமக்களிடம் கூடுதல் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே தேவையான ஊழியர்களை நியமிக்கவும், பேருந்து வசதியை ஏற்படுத்தவும், ரெட்டேரியில் இருந்து கேப்டன் கால்வாய் செல்லும் மழைநீர் கால்வாயை அகலப்படுத்தி தூர்வார தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை ஒருமணிநேரம் அணைத்து வைக்க வேண்டுகோள் 

சென்னை,டிச.15- ஸ்மார்ட்போன்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைக ளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் இடை வெளியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவோ, நிறுவனம் வரும் 20ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை  ஸ்மார்ட்போன்களை ஸ்விட்ச்ஆப் செய்யுமாறு  வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இதனை மக்களிடம் பிரச்சாரம் செய்ய குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. எப்சிபி இந்தியா வால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரப் படம், வரவிருக்கும் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல தயாராகும் மூன்று பேர் கொண்ட குடும்பத்தைப் பற்றியதாகும்.  சுற்றுலாவின் போது தந்தையுடன் பேசி மகிழ்ச்சியாக  இருக்கவிரும்பும் மகள் தனது தந்தை தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால் ஏமாற்றம் அடைகிறாள். இதை உணர்ந்துகொண்ட தந்தை சிலமணிநேரம் செல்போனை அணைத்துவைத்து மகளுடன் பேசுத்தொடங்குகிறார். இதனால் அந்த சிறுமி மகிழ்ச்சியடைவதாக படம் முடிகிறது. தொடர்ச்சியான செல்போன் பயன்பாடு குடும்ப உறவுகளை பாதிப்பதை உணர்த்தும் வகையில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை,டிச.15- சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து  காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து மாற்றம் சனிக்கிழமை (டிச.16) முதல் சோதனை முறையில் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பாலியல் சீண்டல் ஆசிரியரை  பணிநீக்கம் செய்ய வலியுறுத்தல்

விழுப்புரம்,டிச.15- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன். இவர் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும், பாலி யல் சீண்டலில் ஈடுபட்டதும் காவல்துறை யின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அந்த ஆசி ரியரை மாவட்ட கல்வித்துறை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.  இந்நிலையில், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலை வர்கள் எஸ் .கீதா, எஸ்.உமா மகேஸ்வரி, கே.தமிழ்ச்செல்வி, சிபிஎம் தலைவர்கள் முத்துக்குமரன், எம்.கே.முருகன், அஸ்வத்தாமன், விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழு, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றனர். அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.அன்பழகன், மாவட்ட கல்வி அலு வலர் கலையரசி ஆகியோரையும் சந்தித்த னர்.  இனிவரும் காலங்களில் கல்வித்துறை யில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். எனவே, தற்காலிக பணிநீக்கம் செய்து உள்ள ஆசிரியர் மகேஸ்வரனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் பள்ளிகளில் போக்சோ சட்ட குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விபத்தில் மாணவர்கள்  3 பேர் பலி

கள்ளக்குறிச்சி,டிச.15- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த சிறு மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (23), பச்சையப்பன் (17) இந்துமணி (15) ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் உலகிய நல்லூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த அடை யாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை யினர் மாணவர்கள் உடலை மீட்டடனர்.