districts

img

ஜனநாயக முறையில் போராடிய மாணவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்

ஜனநாயக முறையில் போராடிய மாணவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், இந்திய மாணவர் சங்கத் தலைவர்களை தாக்கிய கவுரவ விரிவுரையாளர் ஜவகர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.1) பச்சையப்பன் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட மாவட்ட  துணைத் தலைவர் கு.தமிழ் தலைமையில் நடைபெற்ற  மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் எஸ்.மிருதுளா உள்ளிட்டோர் பேசினர்.