districts

img

புதுவை முதலமைச்சர், அமைச்சர் பதவி விலக கோரி

புதுச்சேரி மார்ச் 9- சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முழு  பொறுப்பேற்று முதலமைச்சர் ரங்கசாமியும் பாஜக அமைச்சர் நமச்சிவாயமும் பதவி விலகக் கோரி வாலிபர், மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி சட்டப் பேரவை அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி வரலாற்றில்  நடைபெறாத மிக கொடூரமான இந்த துயரச் சம்பவத்தை கண்டித்தும், போதை கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படும் பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசின்  முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நமச்சிவா யம் ஆகியோர் தங்களது பதவிகளை உடனடி யாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் சட்டப்பேரவை அருகே சனிக்கிழமை(மார்ச் 9) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம்,மாணவர் பெருமன்றம் இளைஞர் பெருமன்றம், மாணவர், இளை ஞர் காங்கிரஸ், திமுக மாணவரணி,  புதுச்சேரி  யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, முற்போக்கு மாணவர் கழகம், இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை, தமிழ் மாணவர் மன்றம், தந்தை பெரியார் திராவிடர்  கழகம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்,  பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் ஆனந்த், மணிமாறன் பிரவீன் குமார், ெஜயபிரகாஷ், ஆனந்த்பாபு, தமிழ்வாணன், எழிலன், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இப்ப போராட்டத்தில் பங்கேற்றனர். அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி   கடந்து சட்டப்பேரவையை நோக்கி சென்ற  போது காவல்துறையினர் தடுப்பு வேலி  அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த  இடத்தில் வாக்குவாதமும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.