சென்னை, நவ.5- கூடுதல் கல்வி கட்ட ணம் வசூலித்ததாக புகார் அளித்த மாணவியை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடர பட்ட வழக்கில் மாண வியை தேர்வு எழுத அனு மதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கூடுதல் கல்வி கட்டணம் மூலம் ரூ.15 கோடி வரை மாணவர்களிடம் முறை கேடாக வசூலித்ததாக குரு நானக் கல்லூரி மீது மாணவி லோகேஸ்வரி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத அனு மதிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவி லோகேஸ்வரி புகார் அளித்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் செமஸ்டர் தேர்வை எழுத மாணவியை அனு மதிக்குமாறு குருநானக் கல்லூரிக்கு உத்தர விட்டுள்ளது.