districts

img

சென்னை மாநகரின் கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் தனிக்கவனம் அமைச்சர் கே.என். நேரு தகவல்

சென்னை, ஏப். 22 - சென்னை மாநகரின் கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான நிருவாகப் பயிற்சி முகாம் வெள்ளியன்று (ஏப்.22) ரிப்பன் மாளிகையில் நடை பெற்றது. இந்த முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, பயிற்சி  கையேட்டினை வெளியிட் டார். இந்த முகாமில் அமைச் சர் கே.என்.நேரு பேசியதன் சுருக்கம் வருமாறு: சட்டமன்ற உறுப்பினர் கள், அமைச்சர்களால் நிவர்த்தி செய்ய முடியாத மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளை உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது கவுன்சிலர்களுக்கு மரி யாதை கிடைக்கும். எனவே, மக்களின் அன்றாட  பிரச்சினைகளை மாமன்றத் திலே எடுத்துரைத்து அதற்கான தீர்வினை காண வேண்டும். சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச அரங்கில் உயர்த்துவதற்காக முதலமைச்சர் சென்னை மீது தனிக் கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்து வருகிறார்.

மாநகராட்சிக்கு தேவையான நிதியை அமைச்சர்கள் பெற்றுத் தரு வார்கள். எனவே, அதற் கேற்ப மாமன்ற உறுப்பினர் கள் செயலாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த முகாமில் மாமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் சட்டவிதிகள் குறித்தும், பெருநகர சென்னை மாநகராட்சி மன்றம் மற்றும் உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் குறித்தும், நிலைக்குழுக்கள், வார்டு குழுக்களின் பொறுப்பு கள் குறித்தும், சென்னை மாநகராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச் சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.