districts

img

இருளர் இன சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர், ஏப் 26- பொன்னேரியை அடுத்த செவிட்டு பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் இருளர் இன  சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரையே ஆரணி காவல்துறையினரை,  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தி யுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட செவிட்டு பனப்பாக்கம் பகுதி யில் ஆனந்த செங்கல் சூளை அமைந்துள்ளது. இதில் கடந்த 7 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் மாத்தூர் பகுதியை சுற்றி யுள்ள கிராமங்களை சேர்ந்த இரு ளர் இன மக்கள் தொடர்ந்து பணி யாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த கார்த்திகை மாதம் 20 ஜோடிகள் குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு பணி நிமித்தமாக வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த திங்களன்று (ஏப் -24), திருவண்ணாமலை கொரட்டூர் பகுதியை சேர்ந்த    பிரவின் (25), என்ற வாலிபர் இயற்கை உபாதையை கழிக்க சென்ற இருளர் இன சிறுமியை மிரட்டி பட்டம் பகலில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 16 வயது மாற்றுத்திறனாளி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் புதனன்று (ஏப்-26), தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் இ.தவமணி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா ஆகியோர் செங்கல் சூளைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் எங்களது மேஸ்திரி வெங்கடேசன் கடுமை யாக தாக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், எந்த நேரத்திலும் எங்கள்மீது தாக்குதல் நடைபெறும் என்பதால்,  உடனடியாக சொந்த ஊருக்கு பாதுகாப்பாக திரும்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மலைவாழ் மக்கள் வேண்டு கோள் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் வழக்கு செலவுகளை செங்கல் சூளை உரிமையாளர் மனோகர் ஏற்க வேண்டும், மற்றும் இருளர் இன மக்கள் வாங்கியதாக சொல்லப்படும் முன் பணம் அனைத் தையும் ரத்து செய்ய வேண்டும், அச்சத்தில் உள்ள இருளர் இன மக்களை அவர்களின் சொந்த ஊருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர்.