சென்னை, பிப். 4 - கழிவு நீரை அகற்றும் குழாய் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் படுகாய மடைந்தனர். இதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதாள சாக்கடைகளில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. இத்தகைய அடைப்புகளை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரி யம் ஜெட்ராடிங் எந்திரம் வாயிலாக அகற்றி வருகி றது. இந்த எந்திரங்களில் உள்ள டியூப் மூலம் அதிக அழுத்தம் கொடுத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப் படும். அவ்வாறு செய்யும் போது சில நேரங்களில் அழுத்தம் தாங்காமல் டியூப் வெடித்து விபத்து ஏற்படும். இதனால் உயிரிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாதாள சாக்கடை அடை ப்பை வியாழனன்று (பிப்.3) ஜெட்ராடு எந்திரம் கொண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வித மாக ஜெட்ராடு வாகனத்தின் டியூப் வெடித்தது. இந்த விபத்தில் ஜானகிராமன், கோபி ஆகியோர் படுகாய மடைந்தனர். இதில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகி ராமனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. காலில் கடும் காயமுற்ற கோபி ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டனர். இந்த ஜெட்ராடு லாரியை பயிற்சி பெற்ற ஓட்டுநர்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை வைத்தே இயக்கின்றன. வாகனத்தை அவ்வப்போது பழுதுபார்த்து, பராமரிப்பது கிடையாது. குறிப்பாக பழைய டியூப்களை புதுப் பிப்பதே கிடையாது. வாகனத்தில் அழுத்தமானி கிடையாது. இவற்றின் கார ணமாக ஏற்படும் விபத்துக் களால் உயிரிழப்புகளும், உடல் ஊனமடைதலும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துக்களில் பாதிக்கப் படும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு அரசு நிவார ணமும் அளிப்பதில்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.