districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் இன்றும்  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, அக் 15- அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதன்கிழமையும் (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களுக்கும்  விடுமுறை அறிவிக்கப் படுவதாக முதலமைச்சர் அறிவித்துள் ளார்.  இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு புதன்கிழமை (அக்.16)  விடு முறை அறிவிக்கப்படுகிறது. சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங் களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய துறைகள் எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக் கான போக்குவரத்து, மாநகர போக்கு வரத்து, சென்னை மெட்ரோ ரயில், எம்ஆர்டிஎஸ், ரயில்வே, விமான நிலை யம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர்  மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள் ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். புதன்கிழமை (அக்.16) மிக அதிகன மழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனி யார் அலுவலகங்கள் மிகக் குறைந்த பட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டி லிருந்தே பணியாற்றும்படியோ அறி வுரை வழங்க கேட்டுக் கொள்ளப் படுகிறது, என்று முதல்வர் அறிவித்துள் ளார். உயர்நீதிமன்றமும் விடுமுறை  கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை 

அக்.16-ம் தேதி, வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திரு வள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரிய லூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 விமானங்கள் ரத்து

சென்னை, அக். 15- சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புறப்பட வேண்டிய 8 விமா னங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை மற்றும் போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையி லிருந்து பெங்களூரு, அந்த மான், புதுடில்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள் ளனர்.

6 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை,அக்.15- சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்  பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜ புரம் சுரங்கப்பாதை., வில்லி வாக்கம், சூரப்பட்டு அண்டர் பாஸ் சுரங்கப்பாதைகள் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட் டுள்ளது.  சென்னையில் மொத்தம் 58 இடங்களில் போக்கு வரத்து வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இத்தாலி வீரர் சின்னரை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சீனியர் வீரர்கள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜானிக் சின்னர் என அழைக்கப்படும் 23 வயது இளம் இத்தாலி வீரர் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் உலகை மிரட்டி வருகிறார். 2024இல் நடைபெற்ற 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போட்டிகளில் கோப்பையை கைப்பற்றி அசத்திய சின்னர், சின்சினாட்டி (அமெரிக்கா), ரோட்டர்டம் (நெதர்லாந்து), மியாமி (அமெரிக்கா), ஹாலோ (ஜெர்மனி) மற்றும் 2 நாட்களுக்கு முன் நிறைவுபெற்ற ஷாங்காய் (சீனா) ஓபன் உள்ளிட்ட ஏடிபி தொடரிலும் முன்னணி வீரரும், 20க்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜோக்கோவிச்சை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.  சின்னர் சிக்கலானவர் சின்னரின் வெற்றி நடைக்கு முடிவு கட்ட ஜோகோவிச் (செர்பியா), ஜுவரேவ் (ஜெர்மனி), மெத்வதேவ் (ரஷ்யா), தியாபோ (அமெரிக்கா), ரூத் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கடுமையாக போராடியும் அவரை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.

சென்னையில் 19ந் தேதி ரேசன் கடை குறைதீர் முகாம்

சென்னை, அக். 15- சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 19 ந் தேதி அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 19 ந் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கனமழை பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க அவசர கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

சென்னை, அக்.15-  சென்னையில் கனமழை பாதிப்பு தொடர்பாக தொடர்புகொள்ள 15 மண்டலங்களுக்கும் அவசர கால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள் ளன.  அதன்படி, திருவொற்றியூர் மண்ட லத்தைச் சேர்ந்தவர்கள் 9445190102 என்ற எண்ணில் தொடர்பு அலுவலர் பாபுவை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மணலி மண்டலத்தின் தொடர்பு அலுவலர் கோவிந்தராசுவை 9445190002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாதவரம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் திருமுருகனை 9445190003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். தண்டையார்பேட்டை மண்டலத் தின் தொடர்பு அலுவலர் சரவண மூர்த்தியை 9445190004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ராயபுரம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் பரிதாபானுவை 9445190005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருவிக நகர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் முருகனை 9445190006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அம்பத்தூர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் தமிழ்ச்செல்வனை 9445190007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அண்ணாநகர் மண்ட லத்தின் தொடர்பு அலுவலர் சுரேஷை 9445190008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேனாம்பேட்டை மண்ட லத்தின் தொடர்பு அலுவலர் முருக தாஸை 9445190009 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம். கோடம்பாக் கம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் முருகேசனை 9445190010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வளசரவாக்கம் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் உமாபதியை 9445190011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆலந்தூர் மண்டலத் தின் தொடர்பு அலுவலர் பி.எஸ். சீனி வாசனை 9445190012 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அடையாறு மண்டலத்தின் தொடர்பு அலுவலர் பி.வி. சீனிவாசனை 9445190013 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெருங்குடி மண்டலத்தின் தொடர்பு அலுவலர் கருணாகரனை 9445190014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சோழிங்கநல்லூர் மண்டலத்தின் தொடர்பு அலுவலர் ராஜசேகரை 9445190015 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவை மட்டுமின்றி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து விதமான முறையீடுகளுக்கும் 1913 என்ற டோல்-ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ள லாம். பெருநகர சென்னை மாநகராட்சி போக்குவரத்து தொடர்பான புகார்க ளுக்கு சென்னையின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் எனில், 044-23452362 என்ற எண்ணிலும், சென்னை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் எனில் 044-23452330 என்ற போக்குவரத்து காவல்துறை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவை மட்டுமின்றி 9003130103 என்ற வாட்ஸ்அப் எண்ணி லும் புகார்களை தெரிவிக்கலாம். சென்னை காவல்துறையை 100 என்ற அவசர எண்ணிலும், பெண்களுக் கான உதவி எண் 1091/181-லும் தொடர்பு கொள்ளலாம். மின்சார வாரியத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாம்புகளை பிடிக்க வேண்டுமானால் வனத்துறையின் 044-22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறக்க வாய்ப்பில்லை
பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

காஞ்சிபுரம், அக். 15 - காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்திற்குட்பட்ட செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றாக  செம்பரம் பாக்கம் ஏரி உள்ளது. செம்பரம் பாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதி களில் செவ்வாயன்று பகல் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா் வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடி மட்டுமே உள்ளதால் தற்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என அதி காரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி தினமும் இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்பப்பட்டு வருகிறது.  இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் மொத்தம் 24 அடியில் தற்போது 13.23 அடியும், மொத்த கொள்ளளவில் 3645 மில்லியன் கன அடியில், 1223 மில்லியன் கனஅடியும், நீர்வரத்து 260 கனஅடியாகவும், நீர் வெளியேற்றும் 134 கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது இரண்டு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்த அளவே கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மழை நீரின் அளவு 23 அடியாக உயர்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம் தற்போது ஏரியின் நீர்மட்டம் 13 அடி மட்டுமே உள்ள நிலையில் இன்னும் ஏரி நிரம்ப 10 அடி தேவைப்படும் என்பதால் தொடர்ந்து மழை பொழிந்தாலும் முழு கொள்ளளவை எட்டாது எனவும் அவ்வாறு எட்டினாலும் அணையின் பாது காப்பு கருதி முன் எச்சரிக்கை நட வடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரி யிலிருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்க வாய்ப்பு இல்லை எனவும் மழையை பொறுத்தும் ஏரியின் நீர்மட்டம் உயர்வை பொறுத்தே தேவைக்கேற்ப உபரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் இந்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை மக்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது எனவும் உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் செம்பரம் பாக்கம் ஏரியில் ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஏரிக்கு நீர்வரத்து 260 கன அடி மட்டுமே உள்ளதால் தற்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

வெறி நாய்களை பிடிக்க கோரிக்கை 

திருவண்ணாமலை, அக். 15-  திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூ ராட்சி பகுதிகளில் அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிவதால் அப்பகுதி குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் வெளியில் செல்ல மிகவும் அச்சு றுத்தல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.  பொது மக்கள் வளர்க்கும் ஆடு, கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணி களையும் அந்த வெறி நாய்கள் கடித்து குதறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வரு கின்றனர்.  எனவே,  பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

சிதம்பரத்தில் தொடர் மழை: வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்

சிதம்பரம், அக் 15-  சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளான புவனகிரி, காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை  தீவிரமடைந்து வருகிறது. இதனால்  இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.  இதில்  தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி அதன் முழு கொள்ள ளவு 47.5 அடியில் 46 அடிக்கு தண்ணீர் நிரம்பி யுள்ளது.  வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.  இதில் 500 கன அடி வெளி யேற்றப்படுகிறது.  இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வரு வதை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மழை தொடர்ந்து பெய்வதால் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.  3 மாதத்திற்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் நீர் நிலைகளில் சேமிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.  அதேநேரத்தில் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்படும் இடங்களை  தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவஆதித்யாசெந்தில் குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர். காவல்துறையினர், சிதம்பரம் உட்கோட் நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன்ள உள்ளிட்ட அரசு அதிகாரிகள்  சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தன் பாசன ஓடை யில் மழைநீர் செல்வதையும், கிள்ளை, பிச்சாவரம் பகுதிகளில் உள்ள வாய்கால்கள், சிதம்பரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மழை காலத்தில்  உணவுப் பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.