districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு இரண்டாவது கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

ஈரோடு, நவ. 11- இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென் னையில் தமிழக முதல்வர் துவக்கிவைத்த நிலையில், ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி  பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டை கொடுத்து  துவக்கிவைத்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு, வில்ல ரசம்பட்டி, லட்சுமி துரைசாமி திருமண மண்ட பத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட” பய னாளிகளுக்கு ஏடிஎம் அட்டை மற்றும் மக ளிர் உரிமை கையேடுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் வ.சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஏடி எம் அட்டைகளை வழங்கிய பின்னர் பேசுகை யில்,  கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை  இரண்டாம் கட்டமாக சென்னை கலைவாணர்  அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழங் கினார். அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட் டத்திலும் வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்  முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஒரு  கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு மாதந்தோ றும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தற்போது புதிதாகண்டறி யப்பட்டுள்ள 7.35 லட்சம் பயனாளிகளுக்கும்  மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிக ளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்து மொத்தம் 1 கோடியே 13  லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு வழங் கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5  லட்சத்து 38 ஆயிரத்து 645 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் முதல் கட்டமாக 3 லட் சத்து 63 ஆயிரத்து 373 மகளிருக்கு உரிமைத்  தொகை வழங்கப்பட்டது.

மேல்முறையீடு செய்த 40 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள் அலுவலர்கள் மூலமாக பரிசீலனை செய்யப் பட்டது. அதில் 15,455 மகளிருக்கு வழங்கப்ப டுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத் தில் விண்ணப்பம் செய்தவர்களில் சுமார் 3,79, 928 மகளிர் அனைவருக்கும் மாதம் தோறும்  வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. மேலும்  விண்ணப்பம் வழங்கிய தகுதி வாய்ந்த அனை வருக்கும் தொடர்ந்து உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். இதேபோல தமிழ்வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னிமலை, ஸ்ரீ அம்மன் காட்டேஜ் திரு மண மண்டபத்தில் ‘கலைஞர் மகளிர் உரி மைத்திட்ட” பயனாளிகளுக்கு ஏடிஎம்  அட்டை மற்றும் மகளிர் உரிமை கையேடு களை வழங்கினார். ஈரோடு வருவாய் கோட் டாட்சியர் சதீஸ்குமார், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.