districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் சி.கருப்பையனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் சி.கருப்பையனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று (ஜூன் 5) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பொழிச்சலூரிலுள்ள தோழர் சி.கருப்பையனின் நினைவு இல்லத்தில், அவரது உருவப்படத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.அரிகிருஷ்ணன், எம்.தாமு, பகுதிக்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், கிளைச்செயலாளர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.